இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள படம்தான் 'புஷ்பா 2'. இப்படத்தைத் தமிழகத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் வினியோகம் செய்கிறது. இப்படத்தை இங்கு டிஸ்ட்ரிபியூஷன் முறையில்தான் வினியோகம் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் குறிப்பிட்ட ஒரு தொகையை வாங்கி மொத்தமாக,. 50 கோடி ரூபாய்க்கு அட்வான்ஸ் முறையில் இப்படத்திற்கான வினியோகம் நடந்து முடிந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத் தகவல்.
50 கோடி வசூல் வரும் வரை அத்தொகையும், அதற்கு மேலும் கிடைக்கும் தொகையும் நேரடியாக தயாரிப்பாளருக்கு போய்ச் சேரும். படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனம் எத்தனை சதவீதம் கமிஷன் கேட்டுள்ளதோ அது தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வழங்கப்படும். வினியோகஸ்தருடன் தியேட்டர்காரர்கள் அவர்களுக்கான சதவீதம் எவ்வளவு போட்டிருக்கிறார்களோ அதை எடுத்துக் கொண்டு மீதித் தொகையைத்தான் வினியோகஸ்தர்களுக்குத் தருவார்கள். இதுதான் டிஸ்ட்டிரிபியூஷன் முறையிலான வியாபாரம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் 'புஷ்பா 2' படத்திற்கான வினியோகப் பொறுப்பை ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்றுள்ளதால் அவர்கள் அத்தொகையை வசூலித்துக் கொடுக்கும் பொறுப்பைச் செய்வார்கள்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து விஜய் நடித்த 'தி கோட்' படத்தை தெலுங்கில் மைத்ரி மூவிஸ் நிறுவனம்தான் வெளியிட்டது. அதற்குப் பதிலாக இங்கு அவர்கள் தயாரித்துள்ள 'புஷ்பா 2' படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுத் தருகிறது. அடுத்து மைத்ரி நிறுவனம் தயாரித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தையும் தமிழகத்தில் ஏஜிஎஸ் நிறுவனமே வெளியிடலாம் என்றும் கோலிவுட்டில் ஒரு தகவல் சுற்றி வருகிறது.