சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் புஷ்பா. முதல் பாகம் மட்டும் வெளியனா நிலையில் தற்போது விரைவில் இதன் இரண்டாம் பாகம் புஷ்பா 2 என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. அல்லு அர்ஜுனின் நடிப்பை தாண்டி ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு மற்றும் சாமி சாமி பாடலுக்கான நடனம் கூடவே சமந்தாவின் ஊ அண்டாவா என்கிற பாட்டு என இவையெல்லாம் சேர்ந்து படத்திற்கு பக்கபலமாக இருந்தாலும், வில்லனாக பன்வார் சிங் ஷெகாவத் என்கிற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மொட்டை தலையுடன் நடித்திருந்த பஹத் பாசிலின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
புஷ்பா படத்திற்கு பிறகு விக்ரம், மாமன்னன், வேட்டையன், ஆவேசம் ஆகிய படங்கள் மூலம் அவரது லெவல் எங்கேயோ போய்விட்டது. அதனால் தற்போது இரண்டாம் பாகத்தில் அவருக்கான முக்கியத்துவம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக பஹத் பாசிலின் மனைவியும் நடிகையுமான நஸ்ரியா, புஷ்பா இரண்டாம் பாகத்தில் தனது கணவரின் பங்களிப்பு பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி நஸ்ரியா கூறும்போது, “புஷ்பா முதல் பாகத்தில் பார்த்தது பஹத் பாசிலின் வெறும் அறிமுகம் மட்டும் தான். இந்த இரண்டாம் பாகத்தில் தான் உண்மையான பஹத் பாசில் யார் என பார்க்க போகிறீர்கள். இரண்டாம் பாகத்தில் அவருக்கு அதிக அளவில் காட்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் புஷ்பா 2 நிச்சயமாக முழுக்க முழுக்க பஹத் பாசில் ஷோ ஆகத்தான் இருக்கும்” என்று கூறியுள்ளார் நஸ்ரியா.