கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் புஷ்பா. முதல் பாகம் மட்டும் வெளியனா நிலையில் தற்போது விரைவில் இதன் இரண்டாம் பாகம் புஷ்பா 2 என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. அல்லு அர்ஜுனின் நடிப்பை தாண்டி ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு மற்றும் சாமி சாமி பாடலுக்கான நடனம் கூடவே சமந்தாவின் ஊ அண்டாவா என்கிற பாட்டு என இவையெல்லாம் சேர்ந்து படத்திற்கு பக்கபலமாக இருந்தாலும், வில்லனாக பன்வார் சிங் ஷெகாவத் என்கிற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மொட்டை தலையுடன் நடித்திருந்த பஹத் பாசிலின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
புஷ்பா படத்திற்கு பிறகு விக்ரம், மாமன்னன், வேட்டையன், ஆவேசம் ஆகிய படங்கள் மூலம் அவரது லெவல் எங்கேயோ போய்விட்டது. அதனால் தற்போது இரண்டாம் பாகத்தில் அவருக்கான முக்கியத்துவம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக பஹத் பாசிலின் மனைவியும் நடிகையுமான நஸ்ரியா, புஷ்பா இரண்டாம் பாகத்தில் தனது கணவரின் பங்களிப்பு பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி நஸ்ரியா கூறும்போது, “புஷ்பா முதல் பாகத்தில் பார்த்தது பஹத் பாசிலின் வெறும் அறிமுகம் மட்டும் தான். இந்த இரண்டாம் பாகத்தில் தான் உண்மையான பஹத் பாசில் யார் என பார்க்க போகிறீர்கள். இரண்டாம் பாகத்தில் அவருக்கு அதிக அளவில் காட்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் புஷ்பா 2 நிச்சயமாக முழுக்க முழுக்க பஹத் பாசில் ஷோ ஆகத்தான் இருக்கும்” என்று கூறியுள்ளார் நஸ்ரியா.