அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” |
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் ஆவேசம் என்கிற படம் வெளியானது. ஜித்து மாதவன் என்பவர் இயக்கியிருந்த இந்த படத்தில் ரங்கா என்கிற காமெடி தாதா கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் ஒரு தூணுக்கு பின்புறமாக நின்று கொண்டு ஒருபுறம் சீரியஸாக முகம் காட்டியும் இன்னொரு புறம் புன்னகையுடன் முகம் காட்டியும் நடித்து இடம்பெற்ற கரிருங்காலியல்லோ என்கிற பாடல் இன்று பட்டிதொட்டி எல்லாம் ரிலீஸ் வீடியோக்களாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மும்பை போலீசார் இந்த வீடியோவை பொதுமக்களின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு பிரச்சார வீடியோவாக மாற்றி வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோவில் பஹத் பாசில் ஒவ்வொரு பக்கமும் தனது முகத்தை கொண்டு வரும்போது மும்பை போலீசார் தங்களது விழிப்புணர்வு எச்சரிக்கை வாசகங்களான “அவசர உதவிக்கு 100க்கு டயல் செய்யுங்கள்”, “பல எண்கள் கொண்ட சீக்ரெட் பாஸ்வேர்டை பயன்படுத்துங்கள்”, “குறிப்பிட்ட வேகத்திற்குள் வாகனத்தை ஓட்டுங்கள்”, “ஹெல்மெட் அணியாமல் ஓட்டாதீர்கள்” “சந்தேகப்படும்படி ஏதேனும் லிங்க் வந்தால் அதை தெரியப்படுத்துங்கள்” என ஒவ்வொரு வாசகங்களாக குறிப்பிட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். அவர்களது இந்த வித்தியாசமான முயற்சிக்கு பொதுமக்களிடமும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.