2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

புலிமுருகன் இயக்குனர் வைசாக் இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் டர்போ. இவர்களது கூட்டணியில் மூன்றாவது படமாக இது உருவாகியுள்ளதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சனா ஜெயபிரகாஷ் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்னதாக பஹத் பாசிலுக்கு ஜோடியாக பாச்சுவும் அற்புத விளக்கும் என்கிற படத்தில் நடித்துள்ளார். வரும் மே 23ம் தேதி டர்போ படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பத்திரிக்கையாளர்களை மம்முட்டி உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்கள் மம்முட்டியிடம் சமீப காலமாக வெளியான வெற்றி படங்களான பிரம்மயுகம், மஞ்சும்மேல் பாய்ஸ், ஆவேசம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகி என்கிற கதாபாத்திரமே இல்லையே. இனி கதாநாயகி இல்லாமலேயே படம் எடுக்கலாம் என்கிற முடிவுக்கு மலையாள இயக்குனர்கள் வந்து விட்டார்களோ என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த மம்முட்டி, “அது பற்றி நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் இந்த டர்போ படத்தின் கதையே இந்துலேகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாயகி அஞ்சனா ஜெயப்பிரகாஷை வைத்து தான் நகர்கிறது. என்னுடைய கதாபாத்திரமான டர்போ ஜோஸுக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றாலும் என்னை ஒரு வலையில் சிக்க வைக்க அவர் முயற்சிப்பது போன்று இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அவரது கதாபாத்திரம் பேசப்படும்” என்று உறுதியாக கூறியுள்ளார்.