ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா |

பொதுவாக எம்ஜிஆர் படம் வெளியானால் அதிமுகவினர் தியேட்டர்களில் கொடியேற்றி தோரணம் கட்டி அதை ஒரு திருவிழாவாக கொண்டாடுவார்கள். கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய படங்கள் வெளிவந்தால் திமுகவினர் அதேபோல கொண்டாடுவார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகள் தியேட்டரில் கொடியேற்றி தோரணம் கட்டி கொண்டாடிய ஒரே படம் 'சிவப்பு மல்லி'.
1981ம் ஆண்டு வெளியான 'சிவப்பு மல்லி' கம்யூனிச சிந்தனையை சொன்ன ஆரம்பகால படங்களில் முக்கியமானது. ஏவிஎம் சரவணன், அவரது சகோதரர் பாலசுப்பிரமணியம் இணைந்து படத்தை தயாரித்தனர். இது அரசியல் படம் என்பதால் ஏவிஎம் பேனரில் தயாரிக்காமல் பாலசுப்ரமணியம் அண்ட் கம்பெனி என்ற பெயரில் தயாரித்தார்கள். ராம.நாராயணன் இயக்கினார். ஆனாலும் இது ராம நாராயணின் சிந்தனையில் உதித்த படம் அல்ல.
இதன் கதையை எழுதியவர் நடிகரும், கதாசிரியரும், தீவிர கம்யூனிஸ்டுமான ஆந்திராவை சேர்ந்த மதல ரங்கா ராவ். 'எர்ரா மல்லேலு' என்ற பெயரில் சினிமாவாக தயாரானது. முதலாளிகளுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய இரு கம்யூனிச சித்தாந்த தோழர்களைப் பற்றிய இப்படம் ஆந்திராவில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. பிறகு சிறந்த திரைப்படத்துக்கான மாநில அரசின் நந்தி விருதையும் வென்றது.
ஏவிஎம் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியது. அந்த வருட ஆரம்பத்தில் விஜயகாந்த் நடித்த 'சட்டம் ஒரு இருட்டறை' வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த ஒரு படத்திலேயே அநியாயத்தைக் கண்டு பொங்கும் கோபக்கார இளைஞன் என்ற பிம்பம் விஜயகாந்த் மீது ஏற்பட்டிருந்தது. சிவப்பு மல்லியின் பிரதான வேடத்திற்கு இவர்தான் சரியானவர் என்று விஜயகாந்தை ஒப்பந்தம் செய்தது ஏவிஎம். அவரது நண்பராக சந்திரசேகர் நடித்தார். இவர்கள் தவிர சாந்தி கிருஷ்ணா, அருணா, அனுராதா உள்பட பலர் நடித்தார்கள்.
சங்கர் - கணேஷ் இசை அமைத்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற 'எரிமலை எப்படி பொறுக்கும்...' என்ற பாடல் இப்போதும் கம்யூனிஸ்ட் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.




