பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள ‛கொம்பு சீவி' படத்தில், முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் சரத்குமார். அவர் விஜயகாந்த் குறித்து கூறுகையில் ''நான் ஒரு கட்டத்தில் படம் தயாரித்து மிகவும் சோர்வாக இருந்த சமயத்தில் விஜயகாந்திடம் இருந்து அழைப்பு வந்தது. என்னை புலன் விசாரணை படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். அடுத்து கேப்டன் பிரபாகரன் படத்திலும் வாய்ப்பு கொடுத்தார். அந்தசமயத்தில் எனக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். பல மாதங்கள் படப்பிடிப்பு செல்ல முடியாத நிலை. எனக்கு அதில் சின்ன ரோல்தான். என் காட்சிகளை நீக்கிவிட்டு, மற்றொரு நடிகரை வைத்து படத்தை முடித்து இருக்க முடியும். ஆனால், எனக்காக சில மாதங்கள் காத்திருந்து நடிக்க வைத்தார். புலன் விசாரணை படம் பார்த்துவிட்டு உங்களுக்கு புகழ் கிடைக்கும் என்றார். எந்த ஹீரோவும் சொல்லாத வார்த்தை அது. இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் நடித்து இருக்கிறேன். நாங்கள் சாப்பாட்டை பரிமாறிக் கொள்வோம். அவர் உயரமாக இருக்கிறார். அவரை தென்னிந்தியாவின் அமிதாப்பச்சன் என்பேன். அவருக்கும், ஹீரோயினுக்குமான காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது''என்றார்.