Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்னிடம் கேட்காமலேயே கதையை மாற்றி விட்டார் ; வரலட்சுமி மீது 'சரஸ்வதி' பட கதாசிரியர் குற்றச்சாட்டு

10 மார், 2026 - 12:56 IST
எழுத்தின் அளவு:
Varalaxmi-Sarathkumar-slams-Sai-Madhav-Burra-over-his-comment-on-S-Saraswathi-story
Advertisement


தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகையாக மாறி மாறி நடித்து வந்த வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் இயக்குனராக மாறி 'சரஸ்வதி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். சென்சார் சிக்கல் காரணமாக 'எஸ்.சரஸ்வதி' என்கிற பெயரில் கடந்த வாரம் தெலுங்கில் மட்டும் இந்த படம் வெளியானது. இந்த படத்திற்கு பிரபல கதாசிரியரான சாய் மாதவ் புர்ரா என்பவர் கதை எழுதியிருந்தார்.

தற்போது படம் வெளியாகி உள்ள நிலையில் படத்தை பார்த்துவிட்டு, “நான் வரலட்சுமியிடம் கொடுத்த கதை ஒன்று... படத்தில் இடம்பெற்றுள்ள கதை வேறென்றாக இருக்கிறது.. என் கதையை பலாத்காரம் செய்து விட்டார்கள். என்னுடைய கதை பழிவாங்கும் கதை அல்ல.. அதன் ஆன்மாவே வேறு. ஆனால் படத்தில் காட்டப்பட்டிருப்பது வேறு” என்று கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய வரலட்சுமி சரத்குமார், “ஒரு சீனியர் என்கிற முறையில் கதாசிரியரை நான் மதிக்கிறேன். கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்ததால் அவரை கதை விவாதத்திற்கு அழைத்தோம். ஆனால் அவர் வேறு பல பெரிய படங்களில் பணியாற்றிக் கொண்டு பிஸியாக இருந்ததால் எங்களுக்கு ஒதுக்குவதற்கு அவரிடம் நேரமில்லை. அதற்காக இப்படி பலாத்காரம் என்கிற வார்த்தையை அவர் பயன்படுத்தியது தவறு. அப்படிப்பட்டவரிடமிருந்து இந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை. என்ன வார்த்தை பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்” என்று காட்டமாக கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் ... கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு கவுண்டமணி கதாபாத்திர பெயரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap