22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பொங்கல் வெளியீட்டில் பெரிய அளவிலான மோதல் எதுவும் இல்லை. இரண்டாம் நிலை நடிகர்களின் படங்கள்தான் வெளியாகிறது. இதற்கடுத்து சில மாதங்களுக்கு சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அவை பெரும்பாலும் தனி வெளியீடாகத்தான் வர உள்ளது.
ஏப்ரல் 10ம் தேதியன்று தனுஷ் நடிக்கும் 'இட்லி கடை' படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படமும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால், அன்றைய தினம் இருமுனைப் போட்டி என்பது உறுதியாகிவிட்டது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' படமும் தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளது. அந்தப் படமும் ஏப்ரல் 10ம் தேதிதான் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அப்படி வெளிவந்தால் அன்றைய தினம் மும்முனைப் போட்டி நடக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் இப்படி மூன்று படங்கள் வெளிவந்தால் தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது.
ஏப்ரல் வெளியீட்டிற்குப் பிறகு மே முதல் வாரத்தில் தான் படங்களை வெளியிட நாட்களைக் குறிப்பார்கள். ஆண்டு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதம் நடக்கும் என்பதால் அந்த மாதத்திலும் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவராது.