‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளிவந்து தோல்வியைத் தழுவிய படம் 'கங்குவா'. சரித்திர காலமும், இந்தக் காலமும் கலந்த படமாக வெளிவந்தது. குறிப்பிடும்படியான மேக்கிங் படத்தில் இருந்தாலும் கதையும், திரைக்கதையும் மோசமாக இருந்ததால் இப்படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை.
இருந்தாலும் 2025ல் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொள்ள இந்தப் படத்தை விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவிலிருந்து மலையாளப் படமான 'தி கோட் லைப்', 'கேர்ல்ஸ் வில் பி கேர்ல்ஸ்' ஆகிய படங்களும் இந்த நாமினேஷனில் பங்கு கொள்கின்றன.
ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இந்தப் படங்கள் தேர்வாக அதிகப்படியான வாக்குகளைப் பெற வேண்டும். அவற்றிற்கான வாக்களிப்பு ஜனவரி 8ம் தேதி ஆரம்பமாகி 12ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின் எந்தெந்த படங்கள் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது என்பதை ஜனவரி 17ம் தேதி அறிவிப்பார்கள்.