தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் |
தெலுங்குத் திரையுலகத்தில் 'பாகுபலி 2' படம் தந்த பான் இந்தியா வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் வெளியான அனைத்து முக்கியமான பான் இந்தியா படங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அவற்றில் பாலிவுட் நடிகைகள்தான் கதாநாயகிகளாக நடித்திருப்பார்கள்.
பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ' படத்தில் ஷ்ரத்தா கபூர், ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஆலியா பட், 'கல்கி 2898 ஏடி' படத்தில் தீபிகா படுகோனே, 'தேவரா' படத்தில் ஜான்வி கபூர் என பாலிவுட் நடிகைகள் நடித்திருந்தார்கள். தற்போது வெளியாக உள்ள 'கேம் சேஞ்ஜர்' படத்திலும் பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி தான் நடித்துள்ளார்.
'புஷ்பா 1, 2' படங்களில் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா, 'சலார்' படத்தில் தமிழ் நடிகையான ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஹிந்தி கதாநாயகி இல்லை என்றாலும் 'புஷ்பா 2' படம் இந்திய அளவில் நம்பர் 1 வசூலைக் குவித்தது. ஆக, படத்தின் வெற்றி, கதாநாயகி யார் என்பதில் இல்லை என்பதை 'புஷ்பா 2' படத்தின் வெற்றி புரிய வைத்துள்ளது.