விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

தமிழ் சினிமாவில், என்.எஸ்.கிருஷ்ணன், காளி என்.ரத்னம், புலிமூட்டை ராமசாமி, கே.ஆர்.ராமச்சந்திரன் என பல காமெடி நடிகர்கள் இருந்த காதலத்தில் தெலுங்கு சினிமாவில் நட்சத்திர காமெடி நடிகர்கள் என்று யாரும் இல்லை. அங்கு பெரும்பாலும் புராண கதைகளை சினிமா ஆனதால் கமெடி நடிகர்கள் தனியாக தேவைப்படவில்லை.
என்றாலும் தெலுங்கு சினிமாவின் முதல் நட்சத்திர காமெடி நடிகராக கொண்டாடப்படுகிறவர் கே.சிவராவ் என்கிற கஸ்தூரி சிவராவ். மவுன படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் படக் கருவி ஆப்ரேட்டராகவும், கதை சொல்லியாகவும் இருந்தவர் சிவராவ். 'சிவராவ் வர்ணனை செய்யும் படம்' என்றே படத்திற்கு விளம்பரமும் செய்தார்கள்.
சினிமா பேசத் தொடங்கிய பிறகு சிறு சிறு வேடங்களில் நடித்த சிவராவ், 1945ம் ஆண்டு வெளியான 'சூடாமணி' என்ற படத்தின் மூலம் பிரபலமானார். 1949 இல் 'குணசுந்தரி கதா' திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகரானார், அதில் அவர் ஒரு சபிக்கப்பட்ட இளவரசராக நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, அவருடைய பாவனைகளும் வசனங்களும் மிகவும் பிரபலமடைந்ததால் மக்கள் அதே தொனியில் பேசத் தொடங்கினர். சிவராவ் பிற்காலத்தில் தயாராரிப்பாளராகவும், இயக்குனராகவும் மாறினார்.




