சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு |

விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் அவரது மகளாக நடித்து அறிமுகமான சாரா அர்ஜுன், அதன்பிறகு சைவம், சில்லு கருப்பட்டி, பொன்னியின் செல்வன் என பல படங்களில் நடித்தார். சமீபத்தில் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சாரா அர்ஜுன். துரந்தர் படத்தின் வெற்றி விழா மும்பையில் நடைபெற்றபோது, அந்த மேடையில் சாரா அர்ஜுனும் , நடிகர் ராகேஷ் பேடியும் வணக்கம் தெரிவித்தபடி கட்டிப்பிடித்துக் கொண் டார்கள்.
அதுகுறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து, சாரா அர்ஜுனிடம் ராகேஷ் பேடி தவறாக நடந்து கொண்டதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நேரத்தில் அது குறித்து நடிகர் ராகேஷ் பேடி ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறுகையில், துரந்தர் படத்தில் சாரா அர்ஜுனின் தந்தையாக நடித்துள்ளேன். அந்த படப்பிடிப்பு தளத்தில் எப்போது என்னை சந்தித்தாலும் இதுபோன்று ஹக் செய்துதான் அவர் வணக்கம் சொல்வார். அதேபோன்றுதான் அப்படத்தின் வெற்றி விழா மேடையிலும் செய்தார். எங்களுக்கிடையே இருப்பது அப்பா - மகள் உறவு தான். அதனால் இதை ரசிகர்கள் தவறான கோணத்தில் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.