டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் அவரது மகளாக நடித்து அறிமுகமான சாரா அர்ஜுன், அதன்பிறகு சைவம், சில்லு கருப்பட்டி, பொன்னியின் செல்வன் என பல படங்களில் நடித்தார். சமீபத்தில் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் சாரா அர்ஜுன். துரந்தர் படத்தின் வெற்றி விழா மும்பையில் நடைபெற்றபோது, அந்த மேடையில் சாரா அர்ஜுனும் , நடிகர் ராகேஷ் பேடியும் வணக்கம் தெரிவித்தபடி கட்டிப்பிடித்துக் கொண் டார்கள்.
அதுகுறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து, சாரா அர்ஜுனிடம் ராகேஷ் பேடி தவறாக நடந்து கொண்டதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நேரத்தில் அது குறித்து நடிகர் ராகேஷ் பேடி ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் கூறுகையில், துரந்தர் படத்தில் சாரா அர்ஜுனின் தந்தையாக நடித்துள்ளேன். அந்த படப்பிடிப்பு தளத்தில் எப்போது என்னை சந்தித்தாலும் இதுபோன்று ஹக் செய்துதான் அவர் வணக்கம் சொல்வார். அதேபோன்றுதான் அப்படத்தின் வெற்றி விழா மேடையிலும் செய்தார். எங்களுக்கிடையே இருப்பது அப்பா - மகள் உறவு தான். அதனால் இதை ரசிகர்கள் தவறான கோணத்தில் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.