இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
'அமரன்' வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிக்கு சென்றார். மூலவரான முருகப் பெருமான், சண்முகர், பெருமாள், தட்சிணாமூர்த்தி சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனத்திற்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது “முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று தரிசனம் செய்ய வேண்டும் முடிவு செய்தேன். அதனால்தான் முருகன் கோவில்களில் வழிபாடு நடத்தி வருகிறேன்” என்றார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரம் குறித்து நிருபர்கள் கேட்டபோது, அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் “இதுபோல் சம்பவம் நடக்க கூடாது என்பது தான் அனைவரின் எண்ணம். இதற்கு காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் நாம் அனைவரும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம்தான் நிற்க வேண்டும். அதற்கு பெண்களுக்கு தைரியம் வர வேண்டும். இதுபோல் இனி நடக்காது என வேண்டுவோம். அதைத் தான் நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.
பின்னர் மதுரை சென்ற சிவகார்த்திகேயன், திருப்பரங்குன்றத்திலும் தொடர்ந்து பழநி கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார்.