'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
துல்கர் சல்மான் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கில் மட்டுமல்ல அவர் கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த மலையாளத்திலும் அவரது புதிய படங்கள் துவங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படத்தை இயக்கிய நகாஸ் ஹிதாயத், துல்கர் சல்மானை வைத்து அவரது நாற்பதாவது படத்தை இயக்குகிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபலமான வைஜெயந்தி மூவிஸ் உடன் துல்கர் சல்மானின் வே பாரர் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் எஸ்.ஜே சூர்யா மலையாள திரையுலகில் நுழைகிறார் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சில காரணங்களால் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க இருக்கிறார் என்றும் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மிஷ்கினுக்கும் மலையாளத்தில் இதுதான் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.