நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
துல்கர் சல்மான் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கில் மட்டுமல்ல அவர் கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த மலையாளத்திலும் அவரது புதிய படங்கள் துவங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படத்தை இயக்கிய நகாஸ் ஹிதாயத், துல்கர் சல்மானை வைத்து அவரது நாற்பதாவது படத்தை இயக்குகிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபலமான வைஜெயந்தி மூவிஸ் உடன் துல்கர் சல்மானின் வே பாரர் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் எஸ்.ஜே சூர்யா மலையாள திரையுலகில் நுழைகிறார் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சில காரணங்களால் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க இருக்கிறார் என்றும் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மிஷ்கினுக்கும் மலையாளத்தில் இதுதான் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.