பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

துல்கர் சல்மான் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ், தெலுங்கில் மட்டுமல்ல அவர் கொஞ்சம் இடைவெளி விட்டிருந்த மலையாளத்திலும் அவரது புதிய படங்கள் துவங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படத்தை இயக்கிய நகாஸ் ஹிதாயத், துல்கர் சல்மானை வைத்து அவரது நாற்பதாவது படத்தை இயக்குகிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபலமான வைஜெயந்தி மூவிஸ் உடன் துல்கர் சல்மானின் வே பாரர் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் எஸ்.ஜே சூர்யா மலையாள திரையுலகில் நுழைகிறார் என்றும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சில காரணங்களால் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்க இருக்கிறார் என்றும் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மிஷ்கினுக்கும் மலையாளத்தில் இதுதான் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.