இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத்தில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்தவர் நடிகை இயக்குனர் மேக்னா ராஜ். பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பால் காலமானார். இது கன்னட திரை உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மேக்னா ராஜ், ராயன் என்கிற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தற்போது குழந்தைக்கு நான்கு வயதான நிலையில் சிறுவனை தனது பெற்றோரின் பராமரிப்பில் பாதுகாப்பாக விட்டுவிட்டு மீண்டும் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். தனக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்த மலையாளத் திரையுலகிற்கே எட்டு வருடம் கழித்து திரும்பி உள்ள மேக்னா ராஜ் தற்போது சுரேஷ் கோபி நடித்து வரும் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். மீண்டும் மலையாள படத்தில் நடிப்பதற்காக செட்டிற்குள் நுழைந்தபோது அங்கிருந்தவர்கள் தனக்கு அளித்த வரவேற்பை பார்த்ததும் மீண்டும் தாய்வீடு திரும்பியது போன்று உணர்வு ஏற்பட்டதாக கூறியுள்ளார் மேகனா ராஜ்.