பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத்தில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வந்தவர் நடிகை இயக்குனர் மேக்னா ராஜ். பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலகட்டத்தில் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மாரடைப்பால் காலமானார். இது கன்னட திரை உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மேக்னா ராஜ், ராயன் என்கிற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தற்போது குழந்தைக்கு நான்கு வயதான நிலையில் சிறுவனை தனது பெற்றோரின் பராமரிப்பில் பாதுகாப்பாக விட்டுவிட்டு மீண்டும் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். தனக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்த மலையாளத் திரையுலகிற்கே எட்டு வருடம் கழித்து திரும்பி உள்ள மேக்னா ராஜ் தற்போது சுரேஷ் கோபி நடித்து வரும் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். மீண்டும் மலையாள படத்தில் நடிப்பதற்காக செட்டிற்குள் நுழைந்தபோது அங்கிருந்தவர்கள் தனக்கு அளித்த வரவேற்பை பார்த்ததும் மீண்டும் தாய்வீடு திரும்பியது போன்று உணர்வு ஏற்பட்டதாக கூறியுள்ளார் மேகனா ராஜ்.