படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்புடன் வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் விஜய்சேதுபதி பல கேள்விகளுக்கு ரசிகர்கள் அறியாத பல புது விஷயங்களை பதிலாக கூறி வருகிறார். அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியை பெற்ற புஷ்பா திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என ஒரு செய்தி சோசியல் மீடியாவில் பரபரப்பாக வெளியானது.
ஆனால் அதன் பிறகு விஜய்சேதுபதி அந்த படத்தில் நடிக்கவில்லை என்கிற தகவலும் அதன்பிறகு பஹத் பாசில் அந்த படத்தில் நடிக்கிறார் என்கிற செய்தியும் அடுத்தடுத்து வெளியாகின. இந்த நிலையில் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஏன் மறுத்தீர்கள் என்கிற கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளிக்கையில், “புஷ்பா பட வாய்ப்பு நான் மறுக்கவில்லை.. அதே சமயம் நீங்கள் எப்போதும் உண்மையையே பேசிக்கொண்டு இருக்கக் கூடாது.. அது உங்களுக்கு நல்லது இல்லை.. சில நேரங்களில் பொய் சொல்வது நன்று” என்று ஒரு புதிரான பதிலை கூறியுள்ளார்.
அப்படி விஜய்சேதுபதி தன்னை தேடி வந்த கதாபாத்திரத்தை, தான் மறுக்கவில்லை என்றால் என்ன காரணத்திற்காக அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்பதையும் நாசுக்காக சொல்ல மறுத்து விட்டார். அவர் பஹத் பாசில் நடித்த பன்வார்சிங் செகாவத் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாரா, அல்லது சுனில் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாரா என்பதெல்லாம் இயக்குநர் சுகுமாருக்கும் விஜய்சேதுபதிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்.