'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தை முதலில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். படம் ரிலீஸ் குறித்து கடந்த வாரம் முதல் பல்வேறு தகவல்கள் வெளியாகின. படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என்றார்கள். அதன்படியே படத்தை டிசம்பர் 6க்கு தள்ளி வைக்கிறோம் என படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
படம் தள்ளிப் போனதற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள். ஆந்திர அரசியலில் ஏற்பட்ட மாற்றமும் ஒரு காரணம் என்கிறார்கள். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தன் நண்பருக்காக அல்லு அர்ஜூன் பிரச்சாரம் செய்து தற்போதைய புதிய ஆட்சியாளர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டுள்ளார். அவரது உறவினரான பவன் கல்யாணுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்குப் போவதைத் தவிர்த்தார் அல்லு அர்ஜூன். தற்போது இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை என்கிறார்கள்.
மேலும் படத்தின் வேலையை திட்டமிட்டபடி முடிக்க முடியாததும் ஒரு காரணமாம். இப்படத்திற்காக பஹத் பாசில் கொடுத்த தேதிகளை பயன்படுத்தாமல் விட்டுள்ளார்கள். தொடர்ந்து மலையாளப் படங்களில் நடிக்க தேதிகளைக் கொடுத்ததால் 'புஷ்பா 2' குழு கேட்ட போது அவரால் தேதிகளைத் தர முடியவில்லையாம். சமீபத்தில்தான் அவர் தேதிகளை ஒதுக்கியதாகவும் ஒரு தகவல்.
இப்படி சில காரணங்களை அடுத்து படத்தை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனத்திற்கு 40 கோடிக்கு மேல் நஷ்டம் வரலாம் என்பது டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.




