நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த 'டிஎன்ஏ' ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் பெயரை பயன்படுத்தி மோசடி நடக்கிறது: அக்ஷரா ஹாசன் புகார் | மீண்டும் நாயகனாக நடிக்கும் நாசர் | பிளாஷ்பேக்: 3 மொழிகளில் படம் இயக்கிய ஸ்ரீப்ரியா | பிளாஷ்பேக்: வாழ்க்கை முழுக்க போராடிய வசந்தகோகிலம் | ஜப்பான் ரசிகர்கள் ரசித்து மகிழும் 'விக்ரம்' | விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் | தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? |
சமூக வலைத்தளங்களில் தனது காதலி நடிகை பவித்ரா கவுடாவிற்கு தகாத மெசேஜ்கள் அனுப்பியும், துன்புறுத்தல் செய்தவருமான ரேணுகா சுவாமி என்பவரைக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். அவரது காதலி பவித்ரா, மற்றும் சிலரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளார்கள்.
இந்நிலையில் நடிகர் தர்ஷனின் மேனேஜர் ஸ்ரீதர் என்பவர் தர்ஷனின் பெங்களூரூ பண்ணையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனிமையில் இருப்பதால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் தற்கொலைககு முன்பா வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ரேணுகா சுவாமி கொலையில் அவருக்கும் தொடர்புள்ளதா என்று விசாரித்து வந்தார்கள். வழக்கு விசாரணையில் தன் குடும்பத்தை இழுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தர்ஷனிடம் இதற்கு முன்பாக மேனேஜர் ஆகப் பணி புரிந்த மல்லிகார்ஜூன் என்பவர் 2018ம் வருடம் முதல் காணாமல் போய்விட்டார். தர்ஷனின் சினிமா பணிகள் அனைத்தையும் அவர்தான் கவனித்து வந்தாராம். ஆனால், அவர் சினிமா வினியோகத்தில் ஈடுபட்டு நஷ்டமடைந்துள்ளார். தர்ஷன் பெயரைச் சொல்லி அவர் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது.
தற்போதைய மேனேஜர் ஸ்ரீதர் தற்கொலை செய்துள்ள நிலையில் காணாமல் போன முன்னாள் மேனேஜர் மல்லிகார்ஜூன் பற்றியும் தற்போது பேச ஆரம்பித்துள்ளார்கள்.
கொலை வழக்கில் சிக்கியுள்ள தர்ஷன் விவகாரம் தற்போது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.