7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

சமூக வலைத்தளங்களில் தனது காதலி நடிகை பவித்ரா கவுடாவிற்கு தகாத மெசேஜ்கள் அனுப்பியும், துன்புறுத்தல் செய்தவருமான ரேணுகா சுவாமி என்பவரைக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். அவரது காதலி பவித்ரா, மற்றும் சிலரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளார்கள்.
இந்நிலையில் நடிகர் தர்ஷனின் மேனேஜர் ஸ்ரீதர் என்பவர் தர்ஷனின் பெங்களூரூ பண்ணையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனிமையில் இருப்பதால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர் தற்கொலைககு முன்பா வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ரேணுகா சுவாமி கொலையில் அவருக்கும் தொடர்புள்ளதா என்று விசாரித்து வந்தார்கள். வழக்கு விசாரணையில் தன் குடும்பத்தை இழுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தர்ஷனிடம் இதற்கு முன்பாக மேனேஜர் ஆகப் பணி புரிந்த மல்லிகார்ஜூன் என்பவர் 2018ம் வருடம் முதல் காணாமல் போய்விட்டார். தர்ஷனின் சினிமா பணிகள் அனைத்தையும் அவர்தான் கவனித்து வந்தாராம். ஆனால், அவர் சினிமா வினியோகத்தில் ஈடுபட்டு நஷ்டமடைந்துள்ளார். தர்ஷன் பெயரைச் சொல்லி அவர் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது.
தற்போதைய மேனேஜர் ஸ்ரீதர் தற்கொலை செய்துள்ள நிலையில் காணாமல் போன முன்னாள் மேனேஜர் மல்லிகார்ஜூன் பற்றியும் தற்போது பேச ஆரம்பித்துள்ளார்கள்.
கொலை வழக்கில் சிக்கியுள்ள தர்ஷன் விவகாரம் தற்போது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.