அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு | பிளாஷ்பேக்: ஆங்கில படத்தை தழுவிய பாலுமகேந்திரா | ஏவிஎம் சரவணன் மறைவு என் மனதை பாதிக்கிறது : ரஜினி |

இந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் என்றாலே அது ஹிந்தித் திரையுலகத்திற்கே போய்ச் சேரும். ஹிந்திப் படங்கள்தான் உலக அளவில் அதிகமான தியேட்டர்களில் வெளியாகின்றன. அதற்குப் பிறகு தமிழ், தெலுங்குப் படங்கள் இடம் பெறுகின்றன.
ஹிந்தியில் பல முன்னணி நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே சில பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள். படத்தின் வெற்றி, தோல்வி அவர்களைப் பெரிதும் பாதிப்பதில்லை. அதனால், அவர்களது சம்பளத்தில் இறங்கு முகம் என்பதே கிடையாது.
தற்போதைய தகவல்படி இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தீபிகா படுகோனே இருக்கிறார். மற்ற முன்னணி நடிகைகளான ஆலியா பட், கங்கனா ரணாவத், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரை அவர் பின்னுக்குத் தள்ளி உள்ளார்.
பிரபல போர்ப்ஸ் பத்திரிகை, ஐஎம்டிபி-யுடன் இணைந்து நடத்திய ஆய்வில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே ஒரு படத்திற்கு 15 முதல் 30 கோடி வரை வாங்குகிறாராம். கங்கனா 15 கோடி முதல் 27 கோடி, பிரியங்கா 15 கோடி முதல் 25 கோடி, காத்ரினா கைப் 15 கோடி முதல் 25 கோடி, ஆலியா பட் 10 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
தென்னிந்திய நடிகைகள் யாரும் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. இருப்பினும் நாம் விசாரித்த வரையில் நடிகை நயன்தாரா தான் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கிறாராம். அவரது சம்பளம் 5 கோடி என்கிறார்கள்.