'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
இந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் என்றாலே அது ஹிந்தித் திரையுலகத்திற்கே போய்ச் சேரும். ஹிந்திப் படங்கள்தான் உலக அளவில் அதிகமான தியேட்டர்களில் வெளியாகின்றன. அதற்குப் பிறகு தமிழ், தெலுங்குப் படங்கள் இடம் பெறுகின்றன.
ஹிந்தியில் பல முன்னணி நடிகைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே சில பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள். படத்தின் வெற்றி, தோல்வி அவர்களைப் பெரிதும் பாதிப்பதில்லை. அதனால், அவர்களது சம்பளத்தில் இறங்கு முகம் என்பதே கிடையாது.
தற்போதைய தகவல்படி இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தீபிகா படுகோனே இருக்கிறார். மற்ற முன்னணி நடிகைகளான ஆலியா பட், கங்கனா ரணாவத், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரை அவர் பின்னுக்குத் தள்ளி உள்ளார்.
பிரபல போர்ப்ஸ் பத்திரிகை, ஐஎம்டிபி-யுடன் இணைந்து நடத்திய ஆய்வில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே ஒரு படத்திற்கு 15 முதல் 30 கோடி வரை வாங்குகிறாராம். கங்கனா 15 கோடி முதல் 27 கோடி, பிரியங்கா 15 கோடி முதல் 25 கோடி, காத்ரினா கைப் 15 கோடி முதல் 25 கோடி, ஆலியா பட் 10 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்குவதாகத் தெரிவித்துள்ளார்கள்.
தென்னிந்திய நடிகைகள் யாரும் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. இருப்பினும் நாம் விசாரித்த வரையில் நடிகை நயன்தாரா தான் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கிறாராம். அவரது சம்பளம் 5 கோடி என்கிறார்கள்.