50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் |

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் வரலட்சுமி சரத்குமார். அவருக்கும் மும்பையைச் சேர்ந்த நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
சமீபத்தில் சென்னையில் உள்ள அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோருக்கு தன் குடும்பத்தாருடன் சென்று திருமண அழைப்பிதழ் தந்தார் வரலட்சுமி. அடுத்து ஐதராபாத் சென்று அங்குள்ள பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்தார்.
ஜூலை 2ம் தேதி வரலட்சுமி, நிக்கோலய் திருமணம் தாய்லந்து நாட்டில் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளார்களாம். அதற்கடுத்து ஜூலை 3ம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்.
திருமணத்திற்குப் பிறகும் வரலட்சுமி சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ளார்.




