முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
தமிழ் சினிமாவில் நடிப்பவர்களுக்கு பாலிவுட்டில் நடிக்க வேண்டும். அடுத்து ஹாலிவுட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இருக்கும். 2012ம் ஆண்டு போடா போடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வரலட்சுமி. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த படங்கள் ஹிந்தியில் டப்பாகி ஓடிடியில், டிவியில் வெளியாகி உள்ளது. இப்போது விஜய்சேதுபதி மகன் நடிக்கும் பீனிக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், 'RIZANA-A Caged Bird' என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸுடன் அவர் இணைந்து நடிக்கிறார். இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்றது. 'RIZANA-A Caged Bird' திரைப்படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
இந்தப் படம் பற்றி வரலட்சுமி கூறியது “அகாடமி விருது வென்ற ஜெர்மி ஐயன்ஸுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த படம் 'ஸ்கார் ப்ரம் தி லயன் கிங்'. எந்தளவுக்கு பிடிக்கும் என்றால், அந்தப் படத்தின் வசனங்கள் அனைத்தும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அந்த கிங்கிற்கு ஜெர்மி ஐயன்ஸ்தான் குரல் கொடுத்திருப்பார்! அவருடன் ஹாலிவுட்டில் அறிமுகமாவது எனது கனவு நனவான தருணம்.
ஹாலிவுட்டில் மட்டுமல்ல, உலக சினிமா ரசிகர்களாலும் அவர் மிகவும் மதிக்கப்படும் நடிகர். இலங்கையிலும் உலகெங்கிலும் திரைப்பட உருவாக்கத்தின் முகத்தை மாற்றிய முன்னோடியான சந்திரன் ருட்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை! சர்வதேச திரைப்படத் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்களுடன் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார்.