தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு கடந்த சில நாட்களாகவே கன்னட திரை உலகை பரபரப்பாகியுள்ளது. தனது காதலியான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகா சுவாமி தேவையில்லாத டார்ச்சர் கொடுத்தார் என்பதால் சிலரின் உதவியுடன் நடிகர் தர்ஷன் இந்த கொலையை செய்துள்ளார் என்று கூறியுள்ள போலீசார், தர்ஷனுடன் பவித்ரா கவுடா உள்ளிட்ட 10 பேருக்கு மேல் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்துள்ளனர். தர்ஷனின் கைது குறித்து கன்னட திரையுலகில் உள்ள உபேந்திரா, கிச்சா சுதீப் மற்றும் நடிகை ரம்யா உள்ளிட்டோர் கூறும்போது, ரேணுகா சுவாமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இன்னும் சில பிரபலங்கள் இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. நியாயம் கிடைக்க வேண்டும் என பொத்தாம் பொதுவாக கருத்துக்களை கூறி ஒதுங்கிக் கொண்டனர்.
இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும் கன்னட நடிகையுமான சஞ்சனா கல்ராணி தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இவர் தர்ஷனுடன் இணைந்து அர்ஜூன் மற்றும் அக்ரஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தர்ஷனின் கைது குறித்து அவர் கூறும்போது, “நான் தர்ஷனுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளேன். ஒரு நபர் ஏற்கனவே ஓரிருமுறை சில சர்ச்சையான நிகழ்வுகளில் சிக்கியதை வைத்து அவரைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. அதுபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நடப்பது தான். இந்த வழக்கில் தர்ஷன் குற்றம் மட்டுமே சாட்டப்பட்டுள்ளாரே தவிர, அவரை நீங்களாகவே குற்றவாளி என கூறுவது தவறு” என்று கூறியுள்ளார்.
சஞ்சனா கல்ராணியின் இந்த ஆதரவு குரல் ரசிகர்கள் மற்றும் கன்னட திரையுலகினரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.