ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கன்னட நடிகர் தர்ஷன் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு கடந்த சில நாட்களாகவே கன்னட திரை உலகை பரபரப்பாகியுள்ளது. தனது காதலியான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகா சுவாமி தேவையில்லாத டார்ச்சர் கொடுத்தார் என்பதால் சிலரின் உதவியுடன் நடிகர் தர்ஷன் இந்த கொலையை செய்துள்ளார் என்று கூறியுள்ள போலீசார், தர்ஷனுடன் பவித்ரா கவுடா உள்ளிட்ட 10 பேருக்கு மேல் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்துள்ளனர். தர்ஷனின் கைது குறித்து கன்னட திரையுலகில் உள்ள உபேந்திரா, கிச்சா சுதீப் மற்றும் நடிகை ரம்யா உள்ளிட்டோர் கூறும்போது, ரேணுகா சுவாமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இன்னும் சில பிரபலங்கள் இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.. நியாயம் கிடைக்க வேண்டும் என பொத்தாம் பொதுவாக கருத்துக்களை கூறி ஒதுங்கிக் கொண்டனர்.
இந்த நிலையில் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியும் கன்னட நடிகையுமான சஞ்சனா கல்ராணி தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இவர் தர்ஷனுடன் இணைந்து அர்ஜூன் மற்றும் அக்ரஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தர்ஷனின் கைது குறித்து அவர் கூறும்போது, “நான் தர்ஷனுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளேன். ஒரு நபர் ஏற்கனவே ஓரிருமுறை சில சர்ச்சையான நிகழ்வுகளில் சிக்கியதை வைத்து அவரைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. அதுபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நடப்பது தான். இந்த வழக்கில் தர்ஷன் குற்றம் மட்டுமே சாட்டப்பட்டுள்ளாரே தவிர, அவரை நீங்களாகவே குற்றவாளி என கூறுவது தவறு” என்று கூறியுள்ளார்.
சஞ்சனா கல்ராணியின் இந்த ஆதரவு குரல் ரசிகர்கள் மற்றும் கன்னட திரையுலகினரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.