சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பெங்களூருவில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. தெலுங்கு சினிமா பிரபலங்கள் சிலரும் அதில் கலந்து கொண்டனர். காவல்துறையினர் நடத்திய ரத்தப் பரிசோதனையில் பலர் போதை பொருள் உட்கொண்டது தெரிய வந்தது.
அந்த பார்ட்டியில் கலந்து கொண்டு போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஹேமா மீது குற்றம் சாட்டப்பட்டது. முதலில் அவர் அதை மறுத்தார். ஆனால், ரத்த பரிசோதனையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பெங்களூரு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஜூன் 1ம் தேதியே அவர் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால், ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் விசாரணைக்கு வந்தார். அப்போது அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் பலதரப்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
பின் அவரை மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நடிகை ஹேமா கைது செய்யப்பட்டுள்ளது தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




