தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் | மாலத்தீவில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய காஜல் அகர்வால் | மீண்டும் வெளியாகும் 'சேது' | அன்னை இல்ல வழக்கு தள்ளுபடி: சிவாஜி குடும்பம் நிம்மதி | வடிவேலு வழக்கில், சிங்கமுத்துவுக்கு 2500 ரூபாய் அபராதம் | சின்மயி கணவர் இயக்குனர், நடிகர் ராகுல் பிறந்தநாள் : ரஷ்மிகா வாழ்த்து | பிளாஷ்பேக்: நோயை ஜெயித்து, காதலில் தோற்ற விஜி | இளையராஜா பாணியை பின்பற்றும் கோவிந்த் வசந்தா | பிளாஷ்பேக்: காட்சிகளை விற்ற மாடர்ன் தியேட்டர்ஸ் | தனுஷ் மார்க்கெட் எகிறுகிறது : சம்பளம் 50 கோடி? |
மலையாள திரையுலக நடிகர் சங்கத்தின் (அம்மா) தலைவராக நடிகர் மோகன்லால் சில வருடங்களுக்கு முன்புதான் பொறுப்பேற்று இருந்தார். ஆனால் கடந்த வருடம் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பல நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அதில் ஒரு சிலர் கைதான நிகழ்வுகளும் நடந்தது. அதனைத் தொடர்ந்து அதற்கு தார்மீக பொறுப்பேற்று தலைவர் மோகன்லால் உள்ளிட்ட மொத்த நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தார்கள்.
இதனைத் தொடர்ந்து அரசால் நியமிக்கப்பட்ட தற்காலிக குழு நடிகர் சங்க நிர்வாகத்தை கவனித்து வருகிறது. தேர்தல் நடத்தாமல் மீண்டும் ஒரு பொதுக்குழு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது, அல்லது தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது என இரண்டு வாய்ப்புகள் இருந்த நிலையில் நேற்று முன்தினம் நீண்ட நாளைக்கு பிறகு கூடிய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாக குழு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோகன்லால் மீண்டும் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என்பதை அந்த நிகழ்ச்சியிலேயே திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல நடிகர்களின் கோரிக்கையையும் நிராகரித்து தனது இந்த முடிவை உறுதிபட அறிவித்துள்ளார் மோகன்லால். இதனால் பொதுக்குழுவில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். மோகன்லாலின் இந்த முடிவை தொடர்ந்து இன்னும் மூன்று மாதங்களுக்குள் நடிகர் சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ தேர்தல் நடக்கலாம் என்று ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.