அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் | சர்ச்சையை ஏற்படுத்திய 'இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்' | ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் |

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். 2014ம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியை ஆரம்பித்தார். அப்போது நடந்த தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு ஆதரவளித்தார். ஆனால், தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்களுக்காக பிரச்சாரம் மட்டும் செய்தார்.
2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. அப்போது ஒரே ஒரு தொகுதியில் அவர்களது வேட்பாளர் வெற்றி பெற்றார். ஆனால், அவரும் பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதனால், ஜனசேனா கட்சிக்கு எந்த உறுப்பினரும் இல்லாமல் போனது.
நடந்து முடிந்த ஆந்திர மாநில தேர்தலில் தெலுங்கு தேசம், பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 21 இடங்களிலும், பார்லிமென்ட்டிற்காகப் போட்டியிட்ட 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
பவன் கல்யாண், பித்தாபுரம் தொகுதியில் போட்டியிட்டு 1,34,934 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஒய்எஸ்ஆர் கட்சி வேட்பாளர் வங்க கீதாவை விட 70,279 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கட்சி ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. அதனால், பவன் கல்யாணுக்கு தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும், தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.




