பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் உடன் ‛தக் லைப்' படத்தில் நடிக்கிறார். இதுதவிர அவரது தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு பேண்டஸி கலந்த சரித்திர படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் சிம்பு மீது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதாவது, ஒப்பந்தப்படி தனது தயாரிப்பில் நடிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தில் சிம்புவிற்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, ‛‛கமல் உடன் தக் லைப் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. உண்மையை பேசுபவர்களே இந்த உலகத்தில் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். நான் நிறைய உண்மை பேசியிருக்கிறேன். எனக்கு ரெட் கார்ட் எல்லாம் விதிக்கப்படவில்லை. சின்ன பிரச்னை இருந்தது, அதுவும் பேசி தீர்க்கப்பட்டது'' என்றார்.