நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் உடன் ‛தக் லைப்' படத்தில் நடிக்கிறார். இதுதவிர அவரது தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு பேண்டஸி கலந்த சரித்திர படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் சிம்பு மீது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதாவது, ஒப்பந்தப்படி தனது தயாரிப்பில் நடிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தில் சிம்புவிற்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, ‛‛கமல் உடன் தக் லைப் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. உண்மையை பேசுபவர்களே இந்த உலகத்தில் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். நான் நிறைய உண்மை பேசியிருக்கிறேன். எனக்கு ரெட் கார்ட் எல்லாம் விதிக்கப்படவில்லை. சின்ன பிரச்னை இருந்தது, அதுவும் பேசி தீர்க்கப்பட்டது'' என்றார்.