புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

தெலுங்குத் திரையுலகத்தின் பரபரப்பான காதல் ஜோடிகளாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் உதய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை நடைபெற்றது.
காலை 10.10 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, தெலுங்கு முறைப்படி ராஷ்மிகாவின் கழுத்தில் மாங்கல்யம் கட்டியுள்ளார் விஜய் தேவரகொண்டா. கர்நாடக மாநிலம் கூர்க் நகரில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா அவர்களது 'கொடவா' முறைப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டாராம். அதனால், அவரது விருப்பமாக இன்று மாலை 4 மணிக்கு மேல் அந்த முறைப்படியும் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்குத் திரையுலகத்திலிருந்து மட்டும் சில பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். அவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.








