அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி | தமிழில் அழுத்தமாக கால் பதிக்கும் சுராஜ் | பிளாஷ்பேக்: தியாகராஜன் ஜோடியாக நடித்த ஜெயராம் மனைவி | 66 வயதில் அழகியுடன் குத்தாட்டம் போட்ட சஞ்சய் தத் | எதிர்காலத்தில் 'சைபர் விசா' எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன் | மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை | மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா? |

இயக்குனர் ராஜூ முருகன் 'குக்கூ, ஜோக்கர்' என தரமான படங்களை தந்தவர் 'ஜிப்ஸி, ஜப்பான், மை லார்ட்' என அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியது. தற்போது ராஜூ முருகன் அளித்த பேட்டியில் அவரின் திரைபயணத்தின் ஆரம்ப கட்டத்தை குறித்து பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, "முதன்முதலில் நான் 'மகதீரா' பாணியில் ஒரு வரலாற்று படத்தின் கதையை எழுதினேன். இந்த கதையை ஒரு தயாரிப்பாளரின் மூலம் நடிகர் சிலம்பரசனிடம் கூறினேன். அவரும் கதையை கேட்டு பிடித்துள்ளது என்றார். இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு மாத காலங்கள் நானும், சிம்புவும் இந்த கதை குறித்து பேசினோம். ஆனால், அந்த காலகட்டத்தில் சிம்பு இயக்குனர்கள் வெற்றிமாறன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். அதனால் என் படம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை" என தெரிவித்துள்ளார் ராஜூ முருகன்.




