'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் |

திருமணத்தை அவரவர் பாரம்பரிய முறைப்படி நடத்தினாலும், திருமண வரவேற்பை கொஞ்சம் 'மாடர்ன்' ஆக நடத்த வேண்டும் என்றுதான் இன்றைய இளம் தலைமுறை விரும்புகிறது. ஆண்கள் என்றால் கோட், சூட் அணிவதும், பெண்கள் என்றால் விதவிதமான டிசைன்களில் ஆடைகள் அணிவதும் திருமண வரவேற்பில் வழக்கமாக இருக்கிறது. சினிமா பிரபலங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
ஆனால், நேற்று நடைபெற்ற விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமண நிகழ்வில் அவர்கள் அணிந்திருந்த ஆடை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தெலுங்கராக இருந்தாலும் விஜய் தேவரகொன்டா தமிழர்கள் அணியும் விதத்தில் வேட்டி கட்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். ராஷ்மிகா சிகப்பு நிறத்தில் புடவை கட்டியிருந்தார். விஜய்யின் தம்பி ஆனந்த் தேவரகொன்டா தெலுங்கு மக்கள் அணியும் விதத்தில் வேட்டி கட்டியிருந்தாலும் விஜய் தமிழர்கள் வேட்டி கட்டும் விதத்தில் கட்டியிருந்தார்.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாள சினிமா பிரபலங்கள் பலரும் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தினர். கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் நேரில் வந்து வாழ்த்தினாலும் கன்னடத் திரையுலகினர் பெரும்பாலும் வரவில்லை. ராஷ்மிகாவுக்கும், கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டிக்கும் 2017ல் திருமண நிச்சயம் நடந்து பின்னர் அதை முறித்துக் கொண்டனர். கன்னடத் திரையுலகினருக்கு திருமண வரவேற்புக்கான அழைப்பு அனுப்பப்பட்டதா அல்லது அனுப்பியும் அவர்கள் கலந்து கொள்ளவில்லையா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.