'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் |

தெலுங்கு திரையுலகின் நட்சத்திர குடும்பத்து வாரிசும் நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியுமான நடிகர் அல்லு சிரிஷ், நயனிகா ரெட்டி திருமணம் மார்ச் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான கொண்டாட்டங்கள் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில் தற்போது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் சுகுமார், அட்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால் இதில் சம்பந்தமே இல்லாத மலையாளத் திரையுலகை சேர்ந்த பிரபல இயக்குனரும் நடிகருமான பசில் ஜோசப் கலந்து கொண்டதுதான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அல்லு அர்ஜுன் மற்றும் மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பசில் ஜோசப் அந்த நிகழ்வுக்கு வருகை தந்த இயக்குனர் சுகுமார் மற்றும் அட்லீ ஆகியோருடனும் உரையாடியது பலரை புருவம் உயர்த்த உள்ள வைத்துள்ளது. ஒருவேளை அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் அடுத்த படத்தில் இவர் இணைந்து பணியாற்ற இருக்கிறாரா அல்லது அல்லு சிரிஷ் நடிக்கும் படத்தையே இவர் இயக்கப் போகிறாரா என்பது போன்ற யூகங்களையும் இவரது வருகை ரசிகர்களிடம் கிளப்பி விட்டுள்ளது..