அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தற்போது கண்ணப்பா என்கிற புராண படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை முகேஷ் குமார் சிங் என்பவர் இயக்க, மோகன் பாபுவே இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை பான் இந்தியா லெவலில் வெளியிடும் விதமாக பல முன்னணி நட்சத்திரங்களையும் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அந்த வகையில் நடிகர் பிரபாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில் மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து சிவராஜ் குமார் ஆகியோர் இதில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல பாலிவுட்டில் இருந்து அக்சய் குமாரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த அக்சய் குமார் தற்போது தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
“அக்சய் குமாருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் நிறைய கற்றுக்கொள்ள உதவியது. நிறைய சிரிக்க வைத்தது. அதே சமயம் அவரது ஆக்சனை இப்போது மிஸ் பண்ணுகிறேன். வருங்காலத்தில் இன்னும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் விஷ்ணு மஞ்சு.