7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. அவருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறப் போவதாக கடந்த சில வாரங்களாக செய்தி பரவி வந்தது. அது வதந்தியா, உண்மையா என்பது தெரியாமலேயே செய்தியானது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அது குறித்து விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார். “பிப்ரவரி மாதம் எனக்கு திருமணமோ, நிச்சயதார்த்தமோ நடக்கப் போவதில்லை. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை எனக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் இது போன்ற வதந்தியைக் கேட்டு வருகிறேன். விட்டால் என் கையைப் பிடித்து எனக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா பதிலளித்துவிட்ட நிலையில் ராஷ்மிகா இது பற்றி இன்னும் எதுவும் சொல்லவில்லை.