கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. அவருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறப் போவதாக கடந்த சில வாரங்களாக செய்தி பரவி வந்தது. அது வதந்தியா, உண்மையா என்பது தெரியாமலேயே செய்தியானது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அது குறித்து விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார். “பிப்ரவரி மாதம் எனக்கு திருமணமோ, நிச்சயதார்த்தமோ நடக்கப் போவதில்லை. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை எனக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் இது போன்ற வதந்தியைக் கேட்டு வருகிறேன். விட்டால் என் கையைப் பிடித்து எனக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா பதிலளித்துவிட்ட நிலையில் ராஷ்மிகா இது பற்றி இன்னும் எதுவும் சொல்லவில்லை.