மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
'கேஜிஎப்' படங்களின் மூலம் இந்தியத் திரையுலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் கன்னட இயக்குனர் பிரசாந்த நீல். அவரும் பிரபாஸும் இணைந்த பான் இந்தியா படமான 'சலார்' படம் கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியானது.
அதிக எதிர்பார்ப்புடன் வந்த இப்படம் தெலுங்கு ரசிகர்களை மட்டுமே கவர்ந்தது. மற்ற மொழிகளில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை, சாதனை வசூலும் கிடைக்கவில்லை. 1000 கோடி வசூலைக் கடக்கும் என சிலர் சொன்னதற்கு மாறாக 600 கோடி வசூலை மட்டுமே கடந்ததாகத் தெரிகிறது. விமர்சன ரீதியாக பலத்த விமர்சனங்களைப் படம் பெற்றது. 'கேஜிஎப்' சாயல்தான் படத்தில் அதிகமாக இருந்ததாகப் பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் படம் வெளியாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்டதால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. ஹிந்தியில் 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிட முடியும், அதனால், ஹிந்தியில் வெளியாகவில்லை.
ஓடிடி தளத்தில் இப்படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.