ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் |
பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராஜமவுலி, மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. ராஜமவுலி படங்களின் வெற்றிக்கு பக்கபலமாக பணியாற்றி வரும் அவரது தந்தையும் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் இதற்கான கதை உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மகேஷ் பாபு படம் பற்றி அவர் கூறும்போது, நிஜத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை மையப்படுத்தி அட்வென்சர் பாணியிலான திரைப்படமாக உருவாக இருக்கிறது என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்தப்படம் ஒரு பாகத்துடன் முடியாமல் இதற்கு அடுத்தடுத்த பாகங்களும் இருக்கும் விதமாக இதன் மைய கதாபாத்திரத்தை உருவாக்கி வருகிறாராம் விஜயந்திர பிரசாத். அதேசமயம் இதன் அடுத்த பாகங்களில் இதே கதை தொடரும் என்று சொல்ல முடியாது.. கதை வேறாக இருக்கும்.. ஆனால் இதில் நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த பாகங்களில் தொடர்வார்கள் என்றும் ஒரு புதிய தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் விஜயேந்திர பிரசாத்.