சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பெயரிடப்படாத பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விளம்பரப்படங்களிலும் நடித்து வருபவர் மகேஷ்பாபு.
அப்படி அவர் நடித்த ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரப் படம் ஒன்றிற்காக அவர் பெற்ற சம்பளம் குறித்த விசாரணைக்கு அவரை நேரில் ஆஜராகச் சொல்லி அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்த வகையில் மகேஷ்பாபு, 5.9 கோடி ரூபாய் சம்பளம் பெற்றாராம். அதில் 3.4 கோடியை செக் மூலமாகவும், 2.5 கோடியை பணமாகவும் பெற்றதாகத் தகவல். அந்த பணம் குறித்துத்தான் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளாராம்.
மகேஷ்பாபு விளம்பரப் படத்தில் நடித்த அந்த நிறுவனத்தை அமலாக்கத் துறை சமீபத்தில் சோதனை செய்துள்ளது. அதில் கிடைத்த கணக்குககளில் மகேஷ்பாபுவுக்கு தந்த தொகை விசாரணையில் சிக்கியிருக்கிறதாம்.