நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பெயரிடப்படாத பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விளம்பரப்படங்களிலும் நடித்து வருபவர் மகேஷ்பாபு.
அப்படி அவர் நடித்த ரியல் எஸ்டேட் நிறுவன விளம்பரப் படம் ஒன்றிற்காக அவர் பெற்ற சம்பளம் குறித்த விசாரணைக்கு அவரை நேரில் ஆஜராகச் சொல்லி அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்த வகையில் மகேஷ்பாபு, 5.9 கோடி ரூபாய் சம்பளம் பெற்றாராம். அதில் 3.4 கோடியை செக் மூலமாகவும், 2.5 கோடியை பணமாகவும் பெற்றதாகத் தகவல். அந்த பணம் குறித்துத்தான் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளாராம்.
மகேஷ்பாபு விளம்பரப் படத்தில் நடித்த அந்த நிறுவனத்தை அமலாக்கத் துறை சமீபத்தில் சோதனை செய்துள்ளது. அதில் கிடைத்த கணக்குககளில் மகேஷ்பாபுவுக்கு தந்த தொகை விசாரணையில் சிக்கியிருக்கிறதாம்.