Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம்

22 ஏப், 2025 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Actress-Ranjani-condemns-Mala-Parvathys-comment-on-adjustment

மலையாள திரையுலகில் நடிகைகளிடம், நடிகர்கள் உள்ளிட்ட திரையுலகில் பணியாற்றும் பலர் பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் வில்லன் நடிகரான ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருளை உட்கொண்டுவிட்டு தன்னிடம் படப்பிடிப்பில் உடையை சரி செய்வதற்குரிய உதவி செய்ய வரவா என்று கேட்டு அத்துமீறி நடந்ததாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் பிரபல மலையாள குணச்சித்ர நடிகையான மாலா பார்வதி என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், இப்படி திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.

இதுபற்றி அவர் கூறும்போது, “இப்போது இருக்கும் பெண்கள் பலருக்கும் சின்ன விஷயத்தை கூட பூதாகரமாக்கி பார்க்கும் மனோபாவம் வந்துவிட்டது. ஒரு சிறிய ஜோக்கை கூட அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 'நான் உன் ஆடையை சரி செய்ய உதவட்டுமா? உன்னுடன் கூட வரட்டுமா? என்னுடன் உறங்க விருப்பமா?' என்பது போன்ற கேள்விகளை எதிர்கொண்டால் அப்படிப்பட்டவர்களை கெட் லாஸ்ட் என்று சொல்லிவிட்டு அடுத்த வேலைகளை கவனிக்க போய்விட வேண்டியது தானே. இதை பெரிய பிரச்னையாக்கினால் இந்த திரையுலகில் எப்படி நீடித்து பயணிக்க முடியும். இது போன்ற சிக்கல்களை கையாள பெண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

தவறு செய்த ஆண்களை தட்டிக்கேட்பதை விட்டுவிட்டு பெண்கள் எப்படி இதை கையாள வேண்டும் என கருத்து கூறிய மாலா பார்வதியின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாரதிராஜாவின் இயக்கத்தில் 'கடலோர கவிதைகள், முதல் மரியாதை' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரஞ்சனி, மாலா பார்வதிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களை பார்த்து வெட்கப்படுகிறேன் மாலா பார்வதி. நீங்கள் ஒரு சைக்காலஜிஸ்ட் மற்றும் லாயராக இருந்தும் கூட இது போன்ற விஷயங்களை எப்படி ஆதரிக்கிறீர்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. இதுதான் உங்களுடைய குணத்தையும் காட்டுகிறது. ரொம்ப வருத்தமாக இருக்கிறது. உங்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை” என்று கூறியுள்ளார் ரஞ்சனி.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ்மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக ... என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... என்ன சமந்தா தனது முதல் இரண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

spr - chennai,இந்தியா
23 ஏப், 2025 - 06:04 Report Abuse
spr இதுதான் பெரும்பாலான, படித்த பெண்களின் நிலை. படிக்காத பெண்களுக்கு இருக்கும் தன்மான உணர்வு கூட இவர்களுக்கு இல்லை என்பதனை விட இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்கலாம் இப்படிப் பேசுவதால், குற்றம் செய்பவர்களுக்கு மேலும் தவறு செய்யலாம் என்ற எண்ணம் வராதா பெண்களுக்கு பெண்களே எதிரிகள் வாய்ப்புக்காக எவர் எப்படி நடந்து கொண்டாலும், அது குறித்துக் கவலைப்படாதவர்களாக "துடைத்தெறிந்து விட்டுப் போக வேண்டும்" என்றால் இவர்களுக்குத் தன்மானம் என்று ஒன்று இல்லையா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in