ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

ரீரிலீஸ் கலாசாரம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. சில முக்கிய படங்களை மறுபடியும் ரீரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த விதத்தில் ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்த 'பாகுபலி' படத்தை அக்டோபர் மாதம் ரீரிலீஸ் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
'பாகுபலி 2' படம் வெளிவந்து நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 'பாகுபலி' ரீரிலீஸ் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா, “இந்த சிறப்பு நாளில், இந்த ஆண்டு அக்டோபரில், 'பாகுபலி' திரைப்படத்தை இந்திய மற்றும் சர்வதேச அளவில் மறுவெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது வெறும் மறுவெளியீடாக இருக்காது. இது எங்கள் அன்பான ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்ட ஆண்டாக இருக்கும். சில புதியவற்றுடன் அற்புதமான ஆச்சரியங்களை எதிர்பார்க்கக் காத்திருங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
'பாகுபலி' படத்தின் முதல் பாகம் 2015 ஜுலை 10ல் வெளியானது. இந்த வருட அக்டோபரில் அப்படத்தை ரீரிலீஸ் செய்யும் போது 10 ஆண்டுகள் நிறைந்திருக்கும். அதனால், அதன் 10வது ஆண்டு கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




