அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'குட் பேட் அக்லி' படம் இந்த மாதம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. நாளை ஏப்ரல் 30ம் தேதியுடன் இந்தப் படத்தின் ஓட்டம் ஏறக்குறைய நிறைவுக்கு வருகிறது. அதன்பின் சில ஊர்களில் சில காட்சிகள் மட்டுமே தொடர்கிறது.
மே 1ம் தேதி 'ரெட்ரோ, டூரிஸ்ட் பேமிலி' உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் 'குட் பேட் அக்லி' படத்தை பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்குகிறார்கள். இருந்தாலும் கடந்த 20 நாட்களாக இந்தப் படம் எதிர்பார்த்ததை விடவும் நன்றாகவே ஓடி வசூலித்துள்ளது.
பத்து நாட்களுக்கு முன்பாக இந்தப் படம் உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் எந்த வசூல் அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் 240 கோடி வரை வசூல் வந்திருக்கலாம் என்று தகவல். அஜித் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் அதிகமாக வசூலித்த படமாக இந்தப் படம் அமைந்தது.
இருந்தாலும் இன்னும் 500 கோடி வசூல் என்ற அளவில் அஜித் போகாமல் இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு வருத்தமாகவே உள்ளது.