தக் லைப் பட விழாவில் ரஜினி கலந்து கொள்வாரா? | சென்னை பக்கம் வர மறுக்கும் சமந்தா? | ரமணா 2 உருவாக வாய்ப்பு இருக்குதா? | என்னது, ரஜினி சம்பளம் 300 கோடியா? | கோவிந்தா பாடல் நீக்கம் : சந்தானம், ஆர்யா சரண்டர் ஆனது ஏன்? | தாதாசாகேப் பால்கே பயோபிக் : இரண்டு படங்கள் போட்டி? | மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் |
இந்திய அளவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருதுகளாகக் கருதப்படுவது 'பத்ம' விருதுகள். முதற்கட்ட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது.
தமிழ் நடிகர் அஜித், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, ஹிந்தி நடிகர் சேகர் கபூர், நடிகை ஷோபனா உள்ளிட்டவர்கள் நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து பத்மபூஷன் விருதைப் பெற்றார்கள்.
தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா, தெலுங்கு வழக்கப்படி 'பஞ்சகட்டு' பேட்டி, பட்டு சட்டை அணிந்து விருதைப் பெற்றார். 57 வருடங்களுக்கு முன்பாக அவரது அப்பா என்டி ராமராவ் பத்மஸ்ரீ விருதைப் பெற்றபோது அணிந்த 'பஞ்சகட்டு' கலாச்சார ஆடையையே பாலகிருஷ்ணா அணிந்ததை தெலுங்கு மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள்.
ஒரே குடும்பத்தில் பத்ம விருதுகளைப் பெறுவது அபூர்வமாக நடக்கும் ஒன்று. அப்பா என்டிஆர் பத்மஸ்ரீ விருதையும், மகன் பாலகிருஷ்ணா பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார்கள். என்டிஆருக்கு இந்திய அரசு வழங்கும் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே கோரிக்கை வைத்துள்ளார்.