நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் உருவாகியுள்ள 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்காக அவர் ஊர் ஊராகச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழில் பேசியிருந்தார். மலையாள பத்திரிகையாளர்கள் தமிழில் பேசுவதை புரிந்து கொள்வார்கள். அதனால், அங்கு எந்த சர்ச்சையும் எழவில்லை.
ஹைதராபாத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வில் அவர் கன்னடத்தில் பேசினார். அது தெலுங்கு ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. தெலுங்கில் பேசாமல் ஏன் கன்னடத்தில் பேச வேண்டும் என்று கோபப்பட்டார்கள்.
நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் ஹிந்தியில்தான் பேசினார். அப்போது கன்னடத்தில் பேசியது குறித்து எழுந்த சர்ச்சைக்கு அவர் விளக்கம் அளித்தார்.
“நான் கன்னடத்தில் சிந்திக்கிறேன், அதனால் கன்னடத்தில் பேசுகிறேன். ஆனால், புதிய மொழிகளை கற்றுக் கொள்ள விரும்புகிறேன். ஒரு இடத்திற்கு சென்று பேசும்போது, அந்த நிலத்தின் மொழியை அவமரியாதை செய்யக்கூடாது. ஆனால், சில சமயங்களில் அது தவறாக நிகழ்ந்துவிடுகிறது. ஆனால், நான் ஒரு பெருமையான கன்னடிகர், கன்னடத்தில் சிந்திப்பேன், பேசுவேன், எழுதுவேன். அதேபோல், கன்னடத்தை மதிக்கும்போது, மற்ற மொழிகளையும் சமமாக மதித்து அன்பு செய்கிறேன். எல்லா மொழிகளையும் மதிக்கிறேன், எல்லா மொழிகளின் அடிப்படை எப்போதும் ஒன்றே. மற்ற மொழிகளை பேசுவதில் முயற்சி செய்வேன்,” எனப் பேசியுள்ளார்.