'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. அவரது மனைவி நடிகை ஜோதிகாவுடன் இணைந்து '2 டி என்டர்டெயின்மென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஏற்கெனவே நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாது அவரது உறவினர்கள் சிலரும் தனித் தனியாக தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். அவற்றிலும் சூர்யா குடும்பத்தினரின் பங்கு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அப்பட நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் மட்டும்தான் சமீப காலங்களில் சூர்யா, கார்த்தி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புதிதாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை சூர்யா ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிகிறது. 'ழகரம் ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் அந்த நிறுவனம் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதன் முதல் தயாரிப்பாக மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்க உள்ள படமும், இரண்டாவது தயாரிப்பாக பா ரஞ்சித் இயக்க உள்ள படமும் தயாராகும் எனத் தெரிகிறது. இரண்டு படங்களிலும் சூர்யா தான் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
சூர்யா தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தன்னுடைய 46வது படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை முடித்ததும் மேலே குறிப்பிட்ட படங்கள் அடுத்தடுத்து நடக்கும் எனத் தெரிகிறது. 'வாடிவாசல்' படம் எப்போது ஆரம்பமாகும் என்பது தொடர் கேள்வியாகவே உள்ளது.