சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

நடிகர் சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது 46வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படமான சூர்யா 47வது படத்தை இயக்குவது மலையாளத்தில் வெளியான 'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார் என்கிறார்கள்.
இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார் ஜித்து மாதவன். ஏற்கனவே இதில் கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளார் மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பஹத் பாசிலும் நடிக்கவுள்ளார் என தகவல் பரவியது தொடர்ந்து இப்போது இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் 'பிரேமலு' படத்தின் மூலம் பிரபலமான நஸ்லின் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது.
தமிழ், மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரதான கதாபாத்திரங்களில் மலையாள நட்சத்திரங்கள் நடிப்பது சர்ச்சையை கிளப்பும் என தமிழ் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.