தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது 46வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படமான சூர்யா 47வது படத்தை இயக்குவது மலையாளத்தில் வெளியான 'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார் என்கிறார்கள்.
இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார் ஜித்து மாதவன். ஏற்கனவே இதில் கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளார் மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பஹத் பாசிலும் நடிக்கவுள்ளார் என தகவல் பரவியது தொடர்ந்து இப்போது இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் 'பிரேமலு' படத்தின் மூலம் பிரபலமான நஸ்லின் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது.
தமிழ், மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரதான கதாபாத்திரங்களில் மலையாள நட்சத்திரங்கள் நடிப்பது சர்ச்சையை கிளப்பும் என தமிழ் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.