மே 23ல் ‛படை தலைவன்' ரிலீஸ் | பிளாஷ்பேக்: தொடர்கதையாக வந்து பின் சினிமாவான “தியாக பூமி” | தனது கனவுப்படமான 'மகாபாரதம்' அப்டேட் கொடுத்த ராஜமவுலி | மூன்றாவது குழந்தையை தத்தெடுத்த ஸ்ரீலீலா | 70 வருட காஞ்சிபுரம் பட்டு சேலையுடன் பூஜா ஹெக்டே போட்டோஸ் | அமலாக்கத் துறையிடம் அவகாசம் கேட்கும் மகேஷ் பாபு | நான் இப்போது சிங்கிள்: ஸ்ருதிஹாசன் | கேரளா தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட வசூல் விவரம், தமிழிலும் நடக்குமா ? | படம் வெளியாகும் முன்பே பாராட்டு பெறும் 'டூரிஸ்ட் பேமிலி' | ஓடிடியில் தமிழில் வரவேற்பு குறைந்த மோகன்லாலின் 'எம்புரான்' |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. தற்போது ராஜமவுலி இயக்கத்தில் தனது 29வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாது விளம்பரப் படங்களிலும் நடிப்பவர் மகேஷ்பாபு.
ரியல் எஸ்டேட் விளம்பரப் படம் ஒன்றில் நடித்த மகேஷ்பாபு அதற்காக பெற்ற சம்பளம் குறித்த விசாரணை தற்போது அமலாக்கத்துறையில் நடந்து வருகிறது. அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்று மக்களை ஏமாற்றியதாக, அந்த நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது மகேஷ்பாபு விளம்பரப் படத்தில் நடித்தற்காக பெற்ற சம்பளமும் விசாரணை வளையத்தில் சிக்கியது. அந்த நிறுவனத்திடமிருந்து அவர் எந்த விதத்தில் சம்பளம் பெற்றார் என்பதைத் தெரிவிக்க, அவருக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி அவர் இன்று ஆஜராக வேண்டும்.
ஆனால், தனக்கு கூடுதல் அவகாசம் தரும்படி மகேஷ்பாபு பதில் கடிதம் எழுதியுள்ளாராம். வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதுதான் அதற்குக் காரணம் என சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.