'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சின்னத்திரை நடிகர் விஷ்ணுகாந்த் மீது சம்யுக்தா அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்து வந்தார். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சம்யுக்தாவிற்கும், ஆர்.ஜே.ரவிக்கும் இருந்த உறவை ஆடியோவை ரிலீஸ் செய்து அம்பலடுத்தினார் விஷ்ணுகாந்த். இதனைதொடர்ந்து ஆர்.ஜே.ரவி ஒரு அப்யூஸர் என்றும், அதனால் தான் அவரைவிட்டு பிரிந்ததாகவும் சம்யுக்தா கூறினார். இதனால், பலரும் ஆர்.ஜே.ரவியை விமர்சிக்க ஆரம்பித்தனர். அதற்கு பதில் கொடுக்கும் வகையில் ஆர்.ஜே.ரவி நீண்ட ஒரு கடிதத்தை தனது சோஷியல் மீடியா பதிவில் வெளியிட்டிருந்தார்.
அதில், 'நான் எதையும் விளக்கபோவதில்லை. என்னை உங்களுக்கு நன்றாக தெரியும். நான் என்னுடன் நடித்த சக நடிகைகளை பாதுகாப்பாக தான் உணர செய்துள்ளேன். என் பெற்றோர்கள் பெண்களை மதிக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு மேல் நான் விளக்கம் சொல்ல வேண்டுமா? ' என்று பதிவில் கூறியுள்ளார்.
இந்த பதிவை சக நடிகையான வெண்பா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து 'வீ ஸ்டேண்ட் வித் ரவி', 'லெட் கர்மா ஸ்பீக்' என ஆர்.ஜே.ரவிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், பலரும் ஆர்.ஜே.ரவிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர்.
விஷ்ணுகாந்த் வெளியிட்ட ஆடியோவுக்கும் ஆர்.ஜே.ரவியின் இந்த பதிவுக்கும் தற்போது வரை சம்யுக்தா தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே, சம்யுக்தா தான் செய்யும் தப்பை மறைக்க தன்னிடம் உறவிலிருந்த ஆண்கள் மீது பொய்யாக குற்றம் சுமத்துகிறாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.