‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்த் - சம்யுக்தா பிரச்னை நாளுக்கு நாள் பெரிதாக கொண்டே செல்கிறது. விஷ்ணுகாந்த் கொடுக்கும் ஒவ்வொரு பேட்டிக்கும் லைவ்வில் வந்து சம்யுக்தா பதிலடி கொடுத்து வந்தார். இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு அதிகமாகி கொண்டே வர, தன்னை நிரபராதி என நிரூபிக்கும் வகையில் இதுநாள் வரை வெளியிடாமல் இருந்த ஆடியோவை விஷ்ணுகாந்த் வெளியிட்டுள்ளார்.
விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்பே சம்யுக்தா தன்னுடன் 'நிறைமாத நிலவே' தொடரில் நடித்த ஆர்.ஜே.ரவியை காதலித்துள்ளார். அதன்பின் ஆர்.ஜே.ரவி தன்னிடம் அத்துமீறியதாக புகார் கூறி பிரிந்துள்ளார். அதன்பின் விஷ்ணுகாந்தை காதலிப்பதாக அறிவித்த சம்யுக்தா தொடர்ந்து ரவியுடன் ஆறுமாதமாக பேசியுள்ளார். அதிலும், ரவியை மறக்கமுடியவில்லை என்றும் அவருடன் மீண்டும் சேர வேண்டும் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
விஷ்ணுகாந்த தனது எக்ஸ் காதல் குறித்து சம்யுக்தாவிடம் மனம் திறந்து கூறிவிட்ட நிலையிலும், ரவியுடனான தனது உறவை சம்யுக்தா மறைத்து வைத்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி சம்யுக்தாவிடம் பேசிய நபர், விஷ்ணுகாந்திற்கு சம்யுக்தா உண்மையாக இல்லை என்று அந்த ஆடியோவில் பேசியுள்ளார். இந்த ஆடியோ வைரலாகி வரும் நிலையில், இதுநாள் வரை உடனுக்குடன் லைவ் வந்த சம்யுக்தா தற்போது எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார்.