‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சின்னத்திரை இயக்குநர் ஓ.என்.ரத்னம் அழகு, வாணி ராணி போன்ற டிவி சீரியல்களை இயக்கினார். தற்போது ப்ரியமான தோழி, பாண்டவர் இல்லம் மற்றும் செவ்வந்தி ஆகிய ஹிட் தொடர்களை இயக்கி வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் ப்ரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட ஓ.என்.ரத்னம், தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றுள்ள மகன்களை சென்னைக்கு அழைத்து வர ஓ.என்.ரத்னம் புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால், அதற்கு முன் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதாம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மகன்களை வீட்டிற்கு அழைத்து வந்த போது அங்கே அவரது மனைவி சடலமாக கிடந்துள்ளார். ரத்னத்திற்கும் ப்ரியாவுக்குமிடையே ஏற்பட்ட சண்டையில் மனமுடைந்த ப்ரியா, தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இயக்குநர் ஓ.என்.ரத்னத்தின் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.