லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
சின்னத்திரை இயக்குநர் ஓ.என்.ரத்னம் அழகு, வாணி ராணி போன்ற டிவி சீரியல்களை இயக்கினார். தற்போது ப்ரியமான தோழி, பாண்டவர் இல்லம் மற்றும் செவ்வந்தி ஆகிய ஹிட் தொடர்களை இயக்கி வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் ப்ரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட ஓ.என்.ரத்னம், தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றுள்ள மகன்களை சென்னைக்கு அழைத்து வர ஓ.என்.ரத்னம் புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால், அதற்கு முன் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதாம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மகன்களை வீட்டிற்கு அழைத்து வந்த போது அங்கே அவரது மனைவி சடலமாக கிடந்துள்ளார். ரத்னத்திற்கும் ப்ரியாவுக்குமிடையே ஏற்பட்ட சண்டையில் மனமுடைந்த ப்ரியா, தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இயக்குநர் ஓ.என்.ரத்னத்தின் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.