பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
சின்னத்திரை தம்பதிகளான சம்யுக்தா, விஷ்ணுகாந்த் திருமணமாகி சில நாட்களிலேயே பிரிந்துவிட்ட நிலையில், ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம் சொல்லி வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் முதலில் லைவ் வந்த சம்யுக்தா, விஷ்ணுகாந்த் தன் உறவினருக்கு போன் செய்து தன்னை பற்றிய வீடியோ, ஆடியோக்கள் இருப்பதாக கூறி மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார். இதனையடுத்து மாலையில் லைவ் வந்த விஷ்ணுகாந்த் 'நான் யாரையும் மிரட்டவில்லை. சம்யுக்தா மற்றும் அவரது குடும்பத்தாரை என் குடும்பத்தாருடன் சந்தித்து பேசி சுமூகமாக முடிவெடுக்கவே அழைத்தேன்' என்று கூறியிருக்கிறார். அதற்கு சாட்சியாக சம்யுக்தாவின் சித்திக்கு போன் பேசிய ரெக்கார்டை லைவ்வில் போட்டு காண்பித்தார். போலீஸ் ஸ்டேஷனில் நடந்த விவகாரம் மற்றும் சம்மன் குறித்த சம்யுக்தாவின் குற்றச்சாட்டுக்கும் அந்த வீடியோவில் அவர் விளக்கமளித்துள்ளார். இதனையடுத்து இதுநாள் வரை விஷ்ணுகாந்தை கண்மூடித்தனமாக விமர்சித்த பலரும் தற்போது சம்யுக்தா தரப்பிலும் ஏதோ பிரச்னை இருக்கிறது. இருவரும் நேரில் சந்தித்து பேசி விரைவில் தீர்வு காண வேண்டும் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.