தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். சல்மான்கானுக்கு ஜோடியாக கிஸி கா பாய் கிஸி கி ஜான் என்கிற படத்தில் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகி உள்ளது. இதையடுத்து கடந்த சில வாரங்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார் பூஜா ஹெக்டே.
அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட பூஜா ஹெக்டே, “படப்பிடிப்பு தளத்தில் எல்லோரும் சல்மான்கானை 'பாய்' என்று மரியாதையாக அழைத்ததால் நானும் பாய் என்றே அவரை அழைத்தேன். ஆனால் சல்மான்கான் அப்படி அழைக்க வேண்டாம் என என்னிடம் கூறியதுடன் சல்மான் என்று தன் பெயரை சொல்லியே அழைக்கும்படி கூறினார். ஆனாலும் அது மரியாதையாக இருக்காது என்பதுடன் என்னால் அப்படி கூப்பிடவும் முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் எனக்கும் அவருக்கும் சங்கடம் வராத வகையில் அவரது பெயரை சுருக்கி எஸ்.கே என அவரை அழைக்க ஆரம்பித்தேன்” என்று கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.