முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக் : ஒரு பாடலுக்காக 84 ஆயிரம் ஓவியங்கள் | பிளாஷ்பேக்: மூணாறில் படமான முதல் படம் | உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் |

மலையாளத்தில் இதுவரை வெளியான படங்களில் மோகன்லால் நடித்த எம்புரான், ஷாபின் சாகிர் நடித்த மஞ்சும்மல் பாய்ஸ், டொவினோ தாமஸ் நடித்த 2018 ஆகிய படங்கள் மட்டுமே 200 கோடி வசூலை தாண்டி உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் தருண்மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடித்த தொடரும் படமும் 200 கோடியை தொட்டு அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளது. இன்னொரு திரிஷ்யம் என்று கொண்டாடப்படும் தொடரும் தமிழிலும் டப்பாகி 70க்கும் அதிகமான தியேட்டரில் வெளியாகி உள்ளது.
தனது அம்பாசிடர் காரை காதலிக்கிறார் மோகன்லால். 2 போலீசார் அந்த காரிலேயே மோகன்லாலுக்கு தெரியாமல், அவர் மகன் பிணத்தை ஏற்றி புதைக்கிறார்கள். விஷயமறிந்த அப்பா என்ன செய்தார். மகன் ஏன் கொலை செய்யப்பட்டான் என்பது கதை. இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா, இளவரசு ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் சென்னையில் சினிமா பைட்டராக மோகன்லால் வேலை செய்வதா கதை நகர்கிறது. அவர் மாஸ்டர் பாரதிராஜா. படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய கேரக்டராக போட்டோவில் காண்பிக்கப்படுகிறார். ஆனால் நடிக்கவில்லை.