ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு |
மலையாளத்தில் இதுவரை வெளியான படங்களில் மோகன்லால் நடித்த எம்புரான், ஷாபின் சாகிர் நடித்த மஞ்சும்மல் பாய்ஸ், டொவினோ தாமஸ் நடித்த 2018 ஆகிய படங்கள் மட்டுமே 200 கோடி வசூலை தாண்டி உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் தருண்மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடித்த தொடரும் படமும் 200 கோடியை தொட்டு அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளது. இன்னொரு திரிஷ்யம் என்று கொண்டாடப்படும் தொடரும் தமிழிலும் டப்பாகி 70க்கும் அதிகமான தியேட்டரில் வெளியாகி உள்ளது.
தனது அம்பாசிடர் காரை காதலிக்கிறார் மோகன்லால். 2 போலீசார் அந்த காரிலேயே மோகன்லாலுக்கு தெரியாமல், அவர் மகன் பிணத்தை ஏற்றி புதைக்கிறார்கள். விஷயமறிந்த அப்பா என்ன செய்தார். மகன் ஏன் கொலை செய்யப்பட்டான் என்பது கதை. இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா, இளவரசு ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் சென்னையில் சினிமா பைட்டராக மோகன்லால் வேலை செய்வதா கதை நகர்கிறது. அவர் மாஸ்டர் பாரதிராஜா. படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய கேரக்டராக போட்டோவில் காண்பிக்கப்படுகிறார். ஆனால் நடிக்கவில்லை.