சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் |
மலையாளத்தில் இதுவரை வெளியான படங்களில் மோகன்லால் நடித்த எம்புரான், ஷாபின் சாகிர் நடித்த மஞ்சும்மல் பாய்ஸ், டொவினோ தாமஸ் நடித்த 2018 ஆகிய படங்கள் மட்டுமே 200 கோடி வசூலை தாண்டி உள்ளன. இந்நிலையில், சமீபத்தில் தருண்மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடித்த தொடரும் படமும் 200 கோடியை தொட்டு அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளது. இன்னொரு திரிஷ்யம் என்று கொண்டாடப்படும் தொடரும் தமிழிலும் டப்பாகி 70க்கும் அதிகமான தியேட்டரில் வெளியாகி உள்ளது.
தனது அம்பாசிடர் காரை காதலிக்கிறார் மோகன்லால். 2 போலீசார் அந்த காரிலேயே மோகன்லாலுக்கு தெரியாமல், அவர் மகன் பிணத்தை ஏற்றி புதைக்கிறார்கள். விஷயமறிந்த அப்பா என்ன செய்தார். மகன் ஏன் கொலை செய்யப்பட்டான் என்பது கதை. இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா, இளவரசு ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் சென்னையில் சினிமா பைட்டராக மோகன்லால் வேலை செய்வதா கதை நகர்கிறது. அவர் மாஸ்டர் பாரதிராஜா. படத்தில் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய கேரக்டராக போட்டோவில் காண்பிக்கப்படுகிறார். ஆனால் நடிக்கவில்லை.