நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு இப்படி நடந்திருக்குமா என்பது ஆச்சரியம்தான். ஒரேநாளில் மூன்று நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக நடித்த படங்கள் மே 16ம் தேதியன்று வெளியாக உள்ளது.
சந்தானம் நடித்துள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்', சூரி நடித்துள்ள 'மாமன்', யோகி பாபு நடித்துள்ள 'ஜோரா கைய தட்டுங்க' ஆகிய படங்கள்தான் அவை. இவற்றில் சந்தானம் நடித்துள்ள படம் ஹாரர் காமெடி படமாகவும், சூரி நடித்துள்ள படம் சென்டிமென்ட் படமாகவும், யோகிபாபு நடித்துள்ள படம் க்ரைம் த்ரில்லர் படமாகவும் உருவாகியுள்ளது.
சந்தானம் கதாநாயகனாக நடிப்பதிலிருந்து தற்போது காமெடியனாகவும் மீண்டும் நடிக்க உள்ளார். யோகிபாபு அவ்வப்போது கதாநாயகனாக நடிப்பார். சூரி இனிமேல் காமெடியனாக நடிப்பாரா என்பது சந்தேகம்தான். இவர்கள் மூவரும் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் வெளியானாலும் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகைப் படங்களாக உள்ளன. படங்கள் நன்றாக இருந்தால் மூவருமே வெற்றி பெறலாம்.
இவர்களது படங்களுடன் நவீன் சந்திரா, அபிராமி நடித்துள்ள 'லெவன்' படமும் அன்றைய தினம் வெளியாக உள்ளது.